Sunday, July 5, 2015

3 and 4


தடையாவும் நீக்கும் விடைவாகனன் துதி
(திருஞானசம்பந்தர் )


நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடர்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவனின்தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

பக்தி பெருகும்

No comments:

Post a Comment