Monday, July 6, 2015

continuation

காளியை உபாசிக்க சகல நலன்களையும் பெறலாம்.
இவள் கலியுக தெய்வம், தன்னை நம்பியவரை கை விடாதவள்.
க்ஷத்ரியர் ஆன விஸ்வாமித்ரர் வசிஷ்டருடன் ஏற்பட்ட மோதலில் தோல்வியுற்றார்.
ஓர் அந்தணணிடம் தான் தோற்றதை அவரால் ஏற்க முடியவில்லை.
தானும் அந்தணனாக வேண்டுமென நான்முகனையும் விஷ்ணுவையும் நோக்கி தவமிருந்தார். அவர்களால் அவரை அந்தணன் ஆக்க முடியவில்லை.
அதனால் பரமேஸ்வரனை குறித்து தவமிருந்தார் விஸ்வாமித்ரர்.
ஈசன் அவரன் முன் தோன்றி காளியின் ஏகாட்ஷர மந்திரத்தை ஜபம் செய்தால் அவர் கோரிக்கை நிறைவேறுமென்று கூறியருளினார். அவரும் அந்த மந்திரத்தை உருவேற்ற, அதனால் மனமகிழ்ந்த காளி பரமேஸ்வரருடன் அவர் முன் ப்ரத்யட்சமாகி அவரை அந்தணர் ஆக்கினாள். எனவே தான் அவருக்கு சகல சாஸ்திர ஞானமும் கிட்டின. வஷிஷ்டரே அவரை பிரம்மரிஷி என அழைத்ததன் பின்னணியில் காளி தேவியின் அருட்கடாக்ஷமே இருந்துது.
ஆனந்த ராமாயணத்தில் சீதா தேவி காளியின் அம்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா தேவர்களும் அவளுள் அடக்கம்.
அவளை  வழி பட்டாலே அணைத்து தேவ தேவியரை வழிபட்ட பலன் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சர்வ மங்கல வித்யா என்று தக்ஷின காளியின் த்ரிசதீ ஸ்தோத்ரம் அழைக்கபடுகிறது. இறந்தவனையும் உயிர்பிக்க கூடிய "ம்ருத  சந்ஜீவினி சக்தி காளி தேவிக்கு மட்டுமே உண்டு.
பகவான் ஸ்ரீமன் நாராயணன் யோகா நித்திரையில் இருக்கும்போது தோன்றிய மது கைடபர் எனும் அசுரர்களை வதைக்கும் பொருட்டு தாமரையில் பிறந்த பிரம்மன் எந்த தேவியை வழிபட்டு துதிதாரோ அவளே மகா காளி.
அம்பிகையின் ரூப பேதங்களுக்கு ஏற்றவாறு பல சக்கரங்கள் எந்திரங்கள் இருந்த போதிலும் எப்படி ஸ்ரீ சக்கரம் ஒன்றை வெய்தே எல்லா தேவதைகளையும் வழிபடலாம் என விதிமுறைகள் உள்ளதோ அதை போலவே தக்ஷின காளியின் எந்திரத்தை வெய்துக்கொண்டே எல்லா காளிதேவியின் மந்திரங்களையும் பூஜிக்கலாம் என தந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கொல்கத்தாவில் ராமகிருஷ்ணர் உபாசித்த கொல்கத்தாகாளி,
உஜ்ஜைனியில் காளிதாசன் வழிபட்ட மகாகாளி,
ஹிமாசலத்தில், சிம்லா முதல் கல்கா வரை ஒன்பது காளி தேவிகள்,
இமயத்தில் அலகானந்த நதிக்கரையில், கம்சமர்தினி, த்வாரக பீட அதி தேவதையான காளி ,துள்ஜாபூர் பாவநிஎனும் காளி ,
 மயிலை கோலவிழி காளி, மயிலை பச்சைப்பட்டு கோலவிழி காளி,
பச்சை காளி , அபர்ணா காளி, தங்க காளி ,அதிசய காளி, கைலாச அதிசய பார்வதி காளி, கேரள கொடுங்களூரில் பகவதி காளி, திருமலை ராயன்பட்டினம் ஆயிரம் காளி, கோகர்ணத்தில் பத்ரகாளி, தில்லையிலே தில்லை காளி, காஞ்சியின் ஆதிபீதேச்வர காளி, உறையூரில் வெக்காளி, தேரஎழுந்தூரில் கம்பன் பூஜித்த கம்பன் மாகாளி, திருவாசூரில் மதுர காளி, சென்னை தம்புசெட்டி தெருவில், சிவாஜி வழிபட்ட, காளிகாம்பாள் காளி, சென்னை பழைய மாம்பலம் உமாபதி தெருவில் வங்க காளி,  உடையூரில் செல்வமாகாளி என எங்கெங்கும் காளிமாத ஆலயம் கொண்டு திருவருள் பாலித்து கொண்டிருக்கிறாள் .

















No comments:

Post a Comment