Saturday, August 22, 2015

sundaragandam

சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம் படிப்பது தடைகள் போக்கி சுபங்களை சேர்க்கும் என்பர்.
இப்பாடலைச் சொல்வது, சுந்தரகாண்டம் முழுவதும் படித்த பலன் தரும்.

சீராரும் திறல் அனுமன் மாகடலைக் கடந்தேறி
மும்மதிள் நீளிலங்கை புக்குக்கடிகாவில்
வாராரும் முலை மடவாள் வைதேகிதனைக் கண்டு
நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியதோது இனிதிருக்க
மல்லிகை மாமலை கொண்டாங் கார்த்ததுவும்
கலக்கியமா மனத்தினனாய் கைகேயிவரம்  வேண்ட
மலக்கியமா மனத்தினனாய்
மன்னவனு மறாதொழியக்
குலக்குமரா காடுரைப்போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடு சுங்கு யேகியதும்
கங்கை தன்னில் கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திர கூடதிருப்ப பரதநம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலைதீண்ட அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா நின் அபயமென்ன
ஆத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்ஒத்த மானென்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
ஈதுஅவன் கைமோதிரம் என்று
அடையாளம் தெரிந்துரைக்க
மலர்க் குழவாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அநுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன்மாக் கடிக்காவை இறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினமழித்து, மீண்டும் அன்பினால்
அயோத்தியர் கோன் தளர் புரையும் அடி இணைபணியச் சென்றான்.


No comments:

Post a Comment